Chengaiulama.in

Thursday 11 January 2024

ஜும்ஆ பயான் 12/01/2024

இஸ்லாம் கூறும் கனவின் தாத்பரியம்.

அல்லாஹுத்தஆலா இப்பிரபஞ்சத்தில் எண்ணிலடங்கா உயிரினங்களை படைத்து.பின்னர் அல்லாஹ் மனிதனைப் படைப்பில் اشرفُ المخلوقات சிறந்தவனாகவும், பூமியில் தன்خلافت பிரதிநிதித்துவத்தின்  உரிமையாளனாகவும் ஆக்கினான்.

எந்த படைப்பிற்கும் கிடைக்காத பல பாக்கியங்களை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ளான்.

இந்த அருட்கொடைகளில்  ஒன்று தான் கனவு.

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை;கனவுக்கென்று ஒரு حقیقة தாத்பரியம்,உள்ளமை உண்டு.

ஆனால் நபிமார்களின் கனவைப் போல மற்றவர்களின் கனவு حجت شرعی ஷரிஅத்தின் ஆதாரமாகாது.அதனை நபித்துவத்தின் பரக்கத் என்றோ அல்லது வஹியின் நற்செய்தி என்றோ கூறலாம்.۔

முஃமினுக்கு கனவு  என்பது ஒரு நல்ல செய்தி,சுபச்சோபனமாகும். இதுக்குறித்து நபிமொழிகளில்...

1746 وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لَنْ يَبْقَى بَعْدِي مِنَ النُّبُوَّةِ إِلَّا الْمُبَشِّرَاتُ ، فَقَالُوا : وَمَا الْمُبَشِّرَاتُ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الرَّجُلُ الصَّالِحُ أَوْ تُرَى لَهُ ، جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ

அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்கள் (முபஷ்ஷிராத்) தவிர நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை என்று கூற நான் கேட்டேன். அப்போது மக்கள் நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன? என்று வினவினர்.

நபி  ﷺஅவர்கள் நல்ல மனிதர் காணும் நல்ல(உண்மையான) கனவு அல்லது அவருக்கு காட்டப்படும்,கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்" என்று விடையளித்தார்கள்"(அறிவிப்பவர் : அதாஃ இப்னு யஸார்  (ரலி)அவர்கள்.)

சில நேரங்களில் கனவு எதிர்காலத்தில் நடக்கும் ஒரு நிகழ்வைப் பற்றி தெரிவிக்கலாம்.

திருமறையில் சூரா யூசுஃபில்,ஹழ்ரத் யூசுஃப்(அலை)அவர்கள் காணும் கனவைப்போல...

اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِىْ سٰجِدِيْنَ‏

யூஸுஃப் தம் தந்தையாரிடம்: “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது.(அல்குர்ஆன் : 12:4)

அறிஞப்பெருமக்களின் கருத்து;

கனவு உறுதியாக நம்பத்தகுந்ததல்ல.காரணம் கனவு என்பதே انها تخمینیة அனுமானமானது.

நமது எண்ணங்கள், கவலைகள், சூழ்நிலைகள், போக்குகள் காரணமாக பல கனவுகள் நமக்குத் தோன்றுகின்றன.அவற்றில் பலவற்றில் அர்த்தமே இருக்காது.

1)கனவை கண்டவர் பொய் சொல்லலாம்

2)கனவு தெளிவில்லாமல் மூடலாக இருக்கலாம்.

3)கனவுக்கு விளக்கம் கேட்கப்படுபவர்,தகுதியில்லாதவராக இருக்கலாம்.

4)கனவுக்கு விளக்கம் தருபவர் தகுதியானவராக இருந்தாலும்,அவரும் சமயங்களில் தவறான விளக்கம் தரவாய்ப்புள்ளது.قد یصیب و قد یخطأ

கனவுக்கு விளக்கம் தருபவரின் தகுதி என்ன?

கல்விமானாகவும்,உண்மையாளராகவும்,கனவின் விளக்கம் அறிந்தவராகவும் இருப்பதாகும்.

இறை விசுவாசிகளுக்கு  சிலநேரங்களில் இடையூறு விளைவிக்க சில கனவுகளும் ஷைத்தான்களால் ஏற்படுகின்றன.

கனவின் வகைகள்.

அறிஞப்பெருமக்களின் கூற்று படி: 

நான்கு வகையான கனவுகள் உள்ளன:

1-மேலோங்கும் எண்ணம்-حديث النفس

وھی ما يُحدّث به المرء نفسه، ويشغل تفكيره في يومه، فيرى ما يتعلّق به في نومه

ஒருவன் அதிகமாக ஈடுபடும்  அலுவல்களும்,சூழல்களும்  அவன் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை உண்டாக்கி, அவன்  உறங்கும் போது புலன்கள் அனைத்தும் ஓய்வுக்கொள்ளும் போது இதயத்தில் மேலோங்கிய எண்ணங்களும்,  நினைவுகளின் கற்பனை வடிவமாகவும். மனிதர்களின் ஆழ்மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிபடும். 

இதற்கு حديث النفس-மேலோங்கும் எண்ணம் எனப்படும்.

2-ஷைத்தானின் தூண்டுதலால் உண்டாகும் கனவு-حدیث الشیطان 

وھی الرأیا الباطلةوھی من تحزین الشیطان ۔

 மனிதகுல விரோதியான ஷைத்தான்,மனிதனை பயமுறுத்த ,கனவில் அவனுடன் விளையாடுவான், இத்தீய கனவுகள் மனிதனுக்கு  தீங்கு விளைவிக்காது ஆனால் ஒரே நிபந்தனை அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்பது நபிﷺஅவர்களின் கட்டளை. அத்தகைய தீய கனவை நீங்கள் கண்டால்,அதற்கான தீர்வு ஹதீஸில் உள்ளது.

وعن أَبي سعيد الخدريِّ  أنَّه سمِع النَّبيَّ ﷺ يقول: إِذَا رَأى أَحدُكُم رُؤْيَا يُحبُّهَا فَإنَّما هِيَ مِنَ اللهِ تَعَالَى فَليَحْمَدِ اللهَ عَلَيهَا وَلْيُحُدِّثْ بِها وفي رواية: "فَلا يُحَدِّثْ بَها إِلاَّ مَنْ يُحِبُّ، وَإذا رَأَى غَيَر ذَلك مِمَّا يَكرَهُ فإنَّما هِيَ منَ الشَّيْطانِ فَليَسْتَعِذْ منْ شَرِّهَا وَلا يَذكْرها لأَحَدٍ فَإنَّهَا لا تضُّره" متفقٌ عَلَيْهِ.

நபிகள் நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால் அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து) அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்க விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாக தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால் அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து) அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில் அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்"

3-நல்ல கனவு-حدیث الملکہ  

وھی الرؤیا الصادقةوھی بشری من اللہ لعبد ہ 

இது அல்லாஹ்வின் புறத்திலிந்து அடியானுக்கு கிடைக்கும் ஒரு நற்செய்தியாகும்.

இது கடந்த கால, நிகழ்கால,எதிர்கால இவற்றில் மறைவானதை காட்டுகிறது, ஆனால் இதற்கான விளக்கம் விளங்குவதற்கு எளிதாகவோ  அல்லது சிரமமாகவோ  இருக்கலாம்.எனவே கனவின் விளக்கம் சொல்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்வது சிறந்ததாகும்.

4-அல்லாஹுத்தஆலா  நேரடியாகவே கனவில் ஒன்றை வெளிப்படுத்தி காட்டிவிடுவதாகும்.

இது தெளிவானதாகவும், விளக்கத்தின் தேவையற்றதாகவும் இருக்கும். 

இறைதூதுவர்களான நபிமார்களின் கனவுகள் இவ்வகையை சார்ந்ததே ஆகும்.நபிமார்களுக்கும்,சாதாரண மக்களுக்கும் உள்ள கனவுகளுக்கு இடையிலான வேறுபாடு உண்டு.

நபிமார்களின் கனவும் அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்ட وحی தூதுச்செய்தியே ஆகும். அதிலிருந்து பெறப்படும் செய்தி,சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியானதாகும்.

நபிமார்களின் கனவும்  வஹியின் ஒரு வகையே...

قالت عائشة رضي الله عنها : ( أول ما بدئ به رسول الله - صلى الله عليه وسلم - من الوحي الرؤيا الصالحة في النوم ، فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح ) متفق عليه .

அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இறைத்தூதர்(ﷺ)அவர்களுக்கு ஆரம்பமாக வந்த (வஹீ)இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது.

அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது.

ஒரு சாதாரண மனிதனின் கனவில் இருந்து பெறப்பட்ட செய்தி நிச்சயமானது என உறுதியாக கூறமுடியாது.

“நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வஹி (இறைச்செய்தி) தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளாகவே ஆரம்பத்தில் இருந்தது. அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அதிகாலையின் விடியலைப் போன்று அவை தெளிவாக அப்படியே நடக்கும். பின்னர் தனிமையை விரும்பினார்கள். ஹிரா குகையில் தனித்திருந்து பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். பிறகு தனது குடும்பத்தாரிடம் திரும்பி வருவார்கள். இதற்காக உணவையும் தம்மோடு எடுத்துச் செல்வார்கள். உணவு தீர்ந்தவுடன் கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து மீண்டும் உணவை எடுத்துச் செல்வார்கள். இந்த நிலையில்தான் ஹிரா குகையில் அவர்களுக்கு வஹி வந்தது. வானவர் நபியவர்களிடம் வந்து, “ஓதுவீராக!” என்றார். அதற்கவர்கள் “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்நிலையைப் பற்றி பின்வருமாறு விவரித்தார்கள்: பிறகு அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவுக்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு “ஓதுவீராக!” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். மீண்டும் என்னை இறுகக் கட்டியணைத்துவிட்டு “ஓதுவீராக!” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டியணைத்துவிட்டு,

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌‏

 (நபியே! நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன்தான் மகா பெரும் கொடையாளி! (அல்குர்ஆன் 96 : 1-6) என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்.

நபி இப்ராஹிம் (அலை)

 فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى‌ قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ‌ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ‏

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”(அல்குர்ஆன் : 37:102)

நபியையும் தோழர்களையும் உம்ரா செய்ய விடாமல் தடுத்தபோது பெருமானார் கண்ட கனவு(மக்கா வெற்றியின் அடையாளம்)

لَـقَدْ صَدَقَ اللّٰهُ رَسُوْلَهُ الرُّءْيَا بِالْحَـقِّ‌  لَـتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَـرَامَ

கனவை யாரிடமாவது கூறலாமா?கனவின் விளக்கத்தை எவரிடமாவது கேட்கலாமா?

கனவின் விளக்கம் கூற தகுதியானவர்;முதலில் அவர் குர்ஆன்,ஹதீஸை நன்கு பயின்ற ஆலிமாக இருந்து,கனவின் விளக்கும் குறித்த கலையில் தேர்ச்சிப்பெற்றவராக இருக்கவேணடும்.

அல்லாமா முஹம்மதுப்னு ஸீரீன்(ரஹ்)அவர்கள் கனவிற்கென்று تفسير الأحلام தப்ஸீருல் அஹ்லாம் என்ற தனி கிதாபையே எழுதியுள்ளார்கள்.

அதில் இமாம் அவர்களின் கூற்று:நல்ல கனவை கூட பொதுவாக யாரிடமும் சொல்லாமல் இருப்பதே சிறந்தது.

கெட்ட கனவை அறவே யாரிடமும் கூறக்கூடாது ஹதீஸில் வருவதைப்போல "அவூது" ஓதி இடது புறம் மூன்று முறை துப்பிக்கொண்டலே அக்கனவு எந்த தீங்கும் விளைவிக்காது.

ஆனால் நல்ல,கெட்ட எந்த கனவாக இருந்தாலும் அதனை பிறரிடம் தெரிவித்து அதற்கு அவர் நல்ல,கெட்ட எந்த பலனை  கூறினாலும் அது பலிக்கவாய்ப்புண்டு எனவே எந்த கனவாக இருப்பினும் அதனை எவரிடமும் சொல்லாமல் இருப்பதே நல்லது.

وہی علی رجل طائر مالم یحدث بہا فاذا حدث بہا وقعت

(مشکوٰة: ۳۹۶) ”

குர்ஆனில் யூசுஃப் நபியிடம் விளக்கம் கேட்கும் இருநபர்களில் ஒருவர் அதற்கு விளக்கம் நீ கழுவேற்றப்படுவாய்  உன் சிரசை பினம்தின்னி பறவைகள் கொத்தி திண்ணும் என்று கூறிய பின்னர் அப்படி ஒரு கனவை நான் காணவில்லை என்று அவர் கூறுவார்.அதற்கு யூசுஃப் நபி உண்மையோ,பொய்யோ உன் கனவிற்கு நான் கூறிய பலன் கண்டிப்பாக நடக்கும் என்பார்கள்.

يٰصَاحِبَىِ السِّجْنِ اَمَّاۤ اَحَدُكُمَا فَيَسْقِىْ رَبَّهٗ خَمْرًا‌ وَاَمَّا الْاٰخَرُ فَيُصْلَبُ فَتَاْكُلُ الطَّيْرُ مِنْ رَّاْسِهٖ‌ قُضِىَ الْاَمْرُ الَّذِىْ فِيْهِ تَسْتَفْتِيٰنِ‏

“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்).(அல்குர்ஆன் : 12:41)

கெட்ட கனவை யாரிடமும் கூறவேண்டாம்.

جاءَ رَجُلٌ إلى النَّبيِّ ﷺ فَقالَ: يا رَسولَ اللهِ، رَأَيْتُ في المَنامِ كَأنَّ رَأْسِي قُطِعَ، قالَ: فَضَحِكَ النَّبيُّ ﷺ، وَقالَ: إذا لَعِبَ الشَّيْطانُ بأَحَدِكُمْ في مَنامِهِ، فلا يُحَدِّثْ به النّاسَ. وفي رِوايَةٍ: إذا لُعِبَ بأَحَدِكُمْ، وَلَمْ يَذْكُرِ الشَّيْطانَ.

الراوي: جابر بن عبدالله • مسلم، 

ஒரு மனிதர் நபியிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே என் தலை துண்டிக்கப்படுவதைப் போன்று கனவு பார்த்தேன் அப்போது பெருமானார் சிரித்தார்கள். உங்களில் யாரிடமாவது கனவில் சைத்தான் விளையாடினால் அதை மக்களுக்கு மத்தியில் சொல்ல வேண்டாம்.

கனவின் ஒழுக்கங்கள்.

அல்லாமா இப்னு ஹஜர்(ரஹ்)அவர்கள் நல்ல,கெட்ட கனவுகளின் ஒழுக்கங்களை கூறியுள்ளார்கள்

قال ابن حجر : فحاصل ما ذكر من أدب الرؤيا الصالحة ثلاثة أشياء :

நல்ல கனவு கண்டால் பேணவேண்டி ஒழுக்கங்கள் மூன்று

 . أن يحمد الله عليها .

1)நல்ல கனவிற்காக அல்லாஹுவை புகழ்வது

 . وأن يستبشر بها .

2)அதனால் நல்ல பலன் கிடைக்க அல்லாஹுவிடம் துஆ செய்தல்

وأن يتحدث بها لكن لمن يحب دون من يكره .

3)நம் நலம் விரும்புபவரிடம் கனவை சொல்வது,நம்மை வெறுப்பவரிடம் கனவை சொல்லாமல் இருப்பது

தீய கனவு கண்டால்...

  وحاصل ما ذكر من أدب الرؤيا المكروهة أربعة أشياء :

1)அக்கனவின் தீங்கை விட்டும் அல்லாஹுவிடம் பாதுகாவல் தேடுவது

 . أن يتعوذ بالله من شرها .

2)ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுவது

 . ومن شر الشيطان .

3)தீய கனவு கண்டு தூக்கத்திலிருந்து விழித்தால்  இடது புறம் மூன்று முறை துப்பிக்கொள்வது.

 . وأن يتفل حين يهب من نومه عن يساره ثلاثا .

4)கெட்ட கனவை அறவே யாரிடமும் சொல்வதை தவிர்ப்பது.

 . ولا يذكرها لأحد أصلاً .

5)இரண்டு ரகஅத் தொழுவது.

இமாம் புகாரி(ரஹ்)அவர்களின் அபுஹுரைரா(ரலி)அவர்களின் அறிவிப்பில்;"தீய கனவு கண்டால் அதனை யாரிடமும் சொல்லவேண்டாம் அவர் எழுந்து இரண்டு ரகஅத் தொழுதுக்கொள்ளட்டும்"என நாயகம்ﷺஅவர்கள் கூறியுள்ளார்கள்.

هـ. ووقع ( في البخاري ) في باب القيد في المنام عن أبي هريرة خامسة وهي الصلاة ولفظه فمن رأى شيئا يكرهه فلا يقصّه على أحد وليقم فليصلّ ووصله الإمام مسلم في صحيحه .

6)தீய கனவு கண்டவர் ஒருக்களித்து படுத்திருந்தால் நிமிர்ந்து நேராக படுத்துக்கொள்ளவும்

و. وزاد مسلم سادسة وهي : التحول من جنبه الذي كان عليه .....

وفي الجملة فتكمل الآداب ستة ، الأربعة الماضية ، وصلاة ركعتين مثلا والتحوّل عن جنبه إلى النوم على ظهره مثلا .

انظر : " فتح الباري " ( 12 / 370 ) .

(நூல்:ஃபத்ஹுல் பாரி)

அல்லாமா ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி(ரஹ்)அவர்கள்: நல்ல,சிறந்த கனவுகளாக ஒன்பது கனவுகளை கூறியுள்ளார்.

1)நம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ﷺஅவர்களை கனவில் காண்பது.

2)சுவனம் அல்லது நரகத்தை கனவில் காண்பது.

3)நல்லோர்களை,நபிமார்களை கனவில் காண்பது.

4)பரகத் பொருந்திய புனித இடங்களை காண்பது.காபதுல்லாஹ்வை கனவில் காணுவதைப் போல

5)வருங்காலத்தில் நடக்கும் நிகழ்வை கனவில் காண்பது.

 எ.கா ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறப்பது போல கனவு கண்டு,பின் நாட்களில் அப்பெண் ஆண் குழந்தையை பெற்றெடுப்பதை போல 

6)கடந்த கால நிகழ்வுகளை கனவில் நிஜமாகப் பார்ப்பது.

 எ.கா ஒருவர் இறந்து விட்டதை போல கனவு கண்டு பின்னர் உண்மையிலேயே அவர் இறப்பு செய்தி வருவது.

7)நம் குறைபாட்டை தெரிவிக்கும் ஒன்றை கனவில் காண்பது.

எ.கா ஒரு நாய் ஒருவரைக் கடிப்பதை அவர் கனவு கண்டார். என்றால் அவர் கோபமாக இருக்கிறார், அவர் கோபத்தை குறைக்க வேண்டும் என்பது அதன் விளக்கம்.

8)ஒளி(வெளிச்சம்) மற்றும் ஆரோக்கியமான உணவுகளான பால், தேன் மற்றும் நெய் போன்றவற்றைக் கனவு காண்பது.

9)மலக்குமார்களை கனவில் காண்பது.

(حجة اللہ البالغہ:۲/۲۵۳)


உஹத் போர் பற்றி.

عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ أُرَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" رَأَيْتُ فِي رُؤْيَاىَ أَنِّي هَزَزْتُ سَيْفًا فَانْقَطَعَ صَدْرُهُ، فَإِذَا هُوَ مَا أُصِيبَ مِنَ الْمُؤْمِنِينَ يَوْمَ أُحُدٍ، ثُمَّ هَزَزْتُهُ أُخْرَى فَعَادَ أَحْسَنَ مَا كَانَ، فَإِذَا هُوَ مَا جَاءَ بِهِ اللَّهُ مِنَ الْفَتْحِ وَاجْتِمَاعِ الْمُؤْمِنِينَ، وَرَأَيْتُ فِيهَا بَقَرًا وَاللَّهُ خَيْرٌ، فَإِذَا هُمُ الْمُؤْمِنُونَ يَوْمَ أُحُدٍ "".

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நான் ஒரு கனவு கண்டேன். (அதில்) நான் ஒரு வாளை அசைத்தேன். அதன் முனை முறிந்துவிட்டது. உஹுதுப போரின்போது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை அது குறித்தது. பிறகு மீண்டுமொரு முறை அதை நான் அசைத்தேன். அது முன்பிருந்ததை விட மிக அழகாக மாறிவிட்டது. அது அல்லாஹ் (அதே உஹுதுப் போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும், (சிதறி ஓடிய) இறைநம்பிக்கையாளர்கள் (மீண்டும்) ஒன்று திரண்டதையும் குறித்தது. அந்தக் கனவில் நான் சில காளை மாடுகளை (அவை அறுக்கப்படுவது போல்) கண்டேன். (உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் வழங்கிய அந்தஸ்து (அவர்கள் இவ்வுலகில் இருந்த நிலையை விட அவர்களுக்குச்) சிறந்தது ஆகும். எனவே, (அந்த மாடுகள்) உஹுத் நாளில் கொல்லப்பட்ட இறை நம்பிக்கையாளர்களைக் குறிப்பவையாகும். என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.            (ஸஹீஹ் புகாரி : 4081

ஸஹர் நேரம்.

- عن أبي سعيد، عن النبي صلى الله عليه وسلم، قال: «أصدق الرؤيا بالأسحار (أخرجه الترمذي

நபிகள் நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள்:ஸஹர் வேலையில் காணும் கனவு உண்மையானதாகும்.

(அறிவிப்பவர்:அபுஸஈதுல் குத்ரீ(ரலி)அவர்கள் )

ஸஹர் நேரம் என்பது பெரும்பாலும் அந்த நேரத்தில் எண்ணங்கள் ஒருமுகப்பட்டு, சிந்தனைகள் சிதறாமல் அமைதியாக இருக்கும் வேலை, மேலும் தொழுகைக்காக மலக்குமார்கள் இறங்கும் வேலை,துஆக்கள் கபூலாகும் நேரம் என்பதால் சஹர் நேரக்கனவு நல்ல உண்மையான கனவாகும்.

இருப்பினும், ஒரு கனவை உண்மையானது,அதன் நிகழ்வு நிச்சயமானது என்று ஒரு கனவைப் பற்றி உறுதியாகக் கூற முடியாது.

ஏனெனில் ஒரு நல்ல கனவு என்பது அல்லாஹ்வின் வழிகாட்டுதலே தவிர ஷரிஅத்தின் ஆதாரம் அல்ல.

கனவில் கண்ட விஷயம் நிகழ்வில் நடக்கும்போது, ​​அந்த கனவு உண்மையானது என்பது உறுதியாகும்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்களை யாராவது கனவில் கண்டால், அந்த கனவு உறுதியாக உண்மையாகவும் சரியாகவும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அது பொய்யோ  அல்லது ஏமாற்றமோ  என்கிற சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

கனவில் நபியை பார்ப்பது.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ""مَنْ رَآنِي فَقَدْ رَأَى الْحَقَّ، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَكَوَّنُنِي"".

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

(கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் (காட்சியளிப்பவனாக) இருக்கமாட்டான். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹ் புகாரி : 6997.)

عن أبي هريرة رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: من رأني في المنام فسيراني في اليقظة، ولا يتمثل الشيطان 

கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான். என்று இறைத்தூதர்ﷺஅவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:’நபிﷺஅவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபிﷺஅவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)’ என்று இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹுத்தஆலா கண்மணி நாயகம்ﷺஅவர்களை கனவில் தரிசிக்கும் பாக்கியத்தையும்,அன்னவர்களின் ரவ்ளாவை ஜியாரத் செய்யும் வாய்ப்பையும் நமக்கு தந்தருள்ப்புரிவானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


  

No comments:

Post a Comment